Friday, May 27, 2011

மறு பிறப்பில் என் பெயர் என்ன - ப்ரியனின் பிதற்றல்கள்

வடத்தால் பிணையப்பட்ட இரவுகள்
முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை

நான் இறக்கும் வரை அறியவில்லை நான் மரித்தேன் என்று
இறந்த பின்பும் பாவத்தாலும், கடனாலும் கட்டப்பட்டேன்
மரணித்தபின்னும் அமைதியில்லை
அமைதி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன

நொறுக்கப்பட்ட எண்ணங்கள் கல்லறையின் நாலா பக்கமும்
உடல் தட்டையாய், இதயம் இரும்பாய், குருதியற்ற முழுச்சதையாய் கிடத்தப்பட்டேன்

பிரியனகிய என்னை அவர்கள் (மனிதர்கள்) பிரேதம் என்று அழைத்து சிறியவர்களாகிய பொழுதுதான்
தெரிந்துகொண்டேன், என் பெயர் என்னக்கல்ல என் உயிருக்கு என்று

கல்லறை புது கோளகிப்போனது
பழைய உலகில் திரு. பிரியன் என்று அழைக்கப்பட்ட நான்
புது உலகில் மறு பிரியன் என்பதுதான் என் பெயராம்

இது என் உடலுக்கு வைக்கப்பட்ட பெயரல்ல எனக்கு வைக்கப்பட்ட பெயர்
என் உடல் கரைந்தாலும் என்னை மறுபடியும் எம் பெரியவர்கள்
என்னை மறு பிரியன் என்றே அழைப்பார்கள்